Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஐசிசி உலககோப்பை போட்டிக்கு 20 வீரர்கள் தேர்வு.. பிசிசிஐ உருவாக்கிய செம பிளான்.. யாருக்கு வாய்ப்பு?

மும்பை : 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது .2011 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த தொடர் இந்தியாவில் நடத்தப்படுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த முறை தோனி தலைமையிலான இந்திய அணி தனது சொந்த மண்ணில் சாம்பியன் பட்டத்தை வென்றது போல் ரோகித் சர்மா படையும் சாதனை படைக்குமா என்ற ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

50 ஓவர் உலகக் கோப்பை போட்டிக்காக என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது குறித்து பிசிசிஐ இன்று சிறப்பு ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தியது.

பிசிசிஐ அறிவுரை

பிசிசிஐ அறிவுரை

இதில் ரோகித் சர்மா, ராகுல், டிராவிட், வி வி எஸ் லட்சுமணன், ரோஜர் பின்னி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில் கடந்த டி20 உலக கோப்பை செய்த தவறை மீண்டும் ஒருமுறை செய்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்குமாறு ரோகித் சர்மா குழுவிற்கு பிசிசிஐ அறிவுறுத்தி இருக்கிறது. அதன்படி 50 ஓவர் உலகக் கோப்பைக்கு எந்தெந்த வீரர்கள் விளையாட வைக்க வேண்டும் என உத்தேச பட்டியல் ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டிருக்கிறது.

சுழற்சி முறை

சுழற்சி முறை

இதில் 20 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த 20 வீரர்களை வைத்துதான் 50 உலகக் கோப்பையை இந்திய அணி சந்திக்க உள்ளது. இந்த 20 வீரர்களையும் இனிவரும் ஒரு நாள் போட்டிகளில் சுழற்சி முறையில் பயன்படுத்த பிசிசிஐ அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் இந்திய அணி சுமார் 31 நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாட இருக்கிறது. இதனால் வீரர்களுக்கு காயம் ஏற்படக்கூடாது என்பதற்காக பல்வேறு அறிவுறுத்தல்களை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

மாற்று வீரர்கள்

மாற்று வீரர்கள்

கடந்த முறை பும்ரா கடைசி நேரத்தில் டி20 உலக கோப்பையில் இருந்து விலகியதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்பட்டது. இதனால் முன்கூட்டியே பும்ராவுக்கு பதில் யாரை தயார் செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுங்கள் என அணி நிர்வாகத்திற்கு பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. இதன்படி தற்போது 20 வீரர்கள் அடங்கிய உத்தேச பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்கள்

பேட்ஸ்மேன்கள்

இதில் ரோகித் சர்மா, சுப்மான் கில், இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரராக இருக்கிறார்கள். நடு வரிசையில் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் யாதவ் சஞ்சு சாம்சன், கேல ராகுல் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இதேபோன்று ஆல்ரவுண்டர்கள் வரிசையில் ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர்பட்டேல், வாஷிங்டன் சுந்தர், தீபக் ஹூடா போன்றோரும் இடம் பெற்றிருக்கிறார்கள்.

பந்துவீச்சாளர்கள்

பந்துவீச்சாளர்கள்

சுழற் பந்துவீச்சாளராக சாகல், குல்திப் யாதவ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்கள். வேக பந்துவீச்சாளர்களாக பும்ரா ,முகமது சமி, முகமது சிராஜ் ,உம்ரான் மாலிக் மற்றும் தீபக் சாகர் உத்தேச பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்கள். இந்த 20 வீரர்கள் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு தொடர்ந்து ஒரு நாள் போட்டியில் வாய்ப்பு வழங்கப்படும். இதிலிருந்து மெயின் அணிக்கு 16 வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, January 1, 2023, 19:14 [IST]
Other articles published on Jan 1, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+