
புதிய நிறுவனம்
இந்த நிலையில் எம் பி எல் நிறுவனம் கடந்த ஆண்டு முடிவில் விலகியதை அடுத்து கில்லர் என்ற நிறுவனம் இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்தது. தற்போது அதன் ஒப்பந்தம் முடிவடைய நிலையில் தற்போது இந்திய அணி உலகின் பிரபல விளையாட்டு உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான அடிடாஸ் இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்சிக்கு ஒப்பந்தம் செய்து உள்ளது.

5 ஆண்டுகள்
சுமார் ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் இந்த ஒப்பந்தத்திற்கு 350 கோடி ரூபாய் டீல் பேசி முடித்திருக்கிறது பிசிசிஐ. மேலும் இந்த நிறுவனம் இந்திய அணி விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் 65 லட்சம் ரூபாய் பிசிசிஐக்கு வழங்கும். வரும் ஜூன் மாதத்தில் தொடங்கி 2028 ஆம் ஆண்டு வரை அடிடாஸ் நிறுவனம் இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசைன் மாறுமா?
அடிடாஸ் நிறுவனம் வருகைக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியின் தரமும் டிசைனும் சிறப்பாக இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். இந்த நிலையில் அடிடாஸ் நிறுவனத்திற்கும் உலகக்கோப்பைக்கும் ஒரு லக் இருக்கின்றது. பிபா உலக கோப்பையில் அர்ஜென்டினா அணிக்கு அடிடாஸ் நிறுவனம் ஸ்பான்சர் செய்தது.

உலககோப்பை லக்
இதன் மூலம் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணி உலக கோப்பையை மெஸ்ஸி தலைமையில் வென்று சாதனை படைத்தது. இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஒரு ஐசிசி கோப்பையையும் இந்திய அணி கைப்பற்றாத நிலையில் அடிடாஸ் நிறுவனத்தின் வருகையின் மூலம் மீண்டும் இந்தியாவுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.


Click it and Unblock the Notifications











