
பிசிசிஐ மீட்டிங்
இதில் அணிகளின் திட்டங்களை போலவே வீரர்களின் ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்தம் போட்டு, பிசிசிஐ ஊதியம் நிர்ணயிக்கும். அந்தவகையில் இந்த முறை ரகானே, இஷாந்த் சர்மா, விருதிமான் சாஹா போன்ற வீரர்களை ஒப்பந்தத்தில் இருந்து நீக்கவுள்ளதாக தகவல் வெளியாகின.

மெகா அறிவிப்பு
இந்நிலையில் பம்பர் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது ரோகித் சர்மா உள்ளிட்ட அனைத்து ஒப்பந்த இந்திய வீரர்களுக்கும் ஊதிய உயர்வு போடப்படவுள்ளதாக முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்போதைய சம்பளத்தில் இருந்து 20% சதவீதம் வரை கூடுதலாக கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அப்படி பார்த்தால் கோடி கணக்கில் ஊதியங்கள் உயரவுள்ளன.

வீரர்களின் ஊதிய விவரம்
இந்திய கிரிக்கெட்டில் தற்போது மொத்தம் 4 வகையான பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. அதன்படி A+ கிரேட் - ரூ.7 கோடி, A கிரேட் - ரூ.5 கோடி, B கிரேட் - ரூ.3 கோடி, C கிரேட் - ரூ. ஒரு கோடி என வீரர்களின் செயல்பாடுகளை வைத்து பிரிக்கப்படும். அதற்கேற்றார் போல ஊதியங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஒரே ஊதியம் இருந்த சூழலில் தற்போது நன்கு உயர்த்தப்படுகிறது.

கூடுதல் பணம் எங்குள்ளது?
கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வீரர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதன்பின்னர் கொரோனா காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் பழைய ஊதியமே தொடரப்பட்டது. ஆனால் கடந்தாண்டு 2 புதிய ஐபிஎல் அணிகள் விற்கப்பட்டதில் இருந்தும், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளில் வந்த பணத்தின் மூலம் இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்படவிருக்கிறது.


Click it and Unblock the Notifications