
பிர்மிங்க்ஹாம் : பென் ஸ்டோக்ஸ் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறமாட்டார் என கூறப்பட்டது. தற்போது அதன் பின்னணி என்ன என வெளியாகி உள்ளது. அதன்படி, அவர் மீது உள்ள வழக்கு விசாரணை காரணமாக நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளதால் அவர் அணியில் சேர்க்கப்படவில்லை என தெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரின் இரவு கேளிக்கை விடுதி ஒன்றில், பென் ஸ்டோக்ஸ் மற்றும் இரண்டு நபர்கள் தகராறில் ஈடுபட்டு ஒருவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
