
வார்னர் அதிரடி
பின்னர் வார்னருடன் ஜோடி சேர்ந்த மார்னஸ் லாபஸ்சேங், நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். முதலில் அமைதியாக விளையாடிய வார்னர் பின்னர் அதிரடியை காட்ட தொடங்கினார். வார்னர் 11 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் விளாச 94 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடிய லாபஸ்சேங் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு வார்னர், லாபஸ்சேங் ஜோடி 156 ரன்களை சேர்த்தது.

அதிரடி சதம்
வார்னரை வீழ்த்திய அடுத்த பந்திலேயே கேமிரான் கிரீனையும் வீழ்த்திய ராபின்சன் ஹாட்ரிக் வாய்ப்பை தவறவிட்டார். 240 ரன்களுக்கு6 விக்கெட் என்று ஆஸ்திரேலியா மீண்டும் சரிவை காண, டிராவிஸ் ஹேட் அதிரடியாக விளையாடினார். இங்கிலாந்து பந்துவீச்சை ஒரு கை பார்த்த அவர் 85 பந்துகளில் சதம் விளாசினார். இதில் 12 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.

வலுவான நிலை
இதன் மூலம் ஆஷஸ் கிரிக்கெட் வரலாற்றிலேயே 3வது அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை டிராவிஸ் ஹேட் படைத்தார். ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 343 ரன்கள் எடுத்துள்ளது. ஹேட் 112 ரன்களுடன் களத்தில் உள்ளார். தற்போது இங்கிலாந்தை விட 196 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் ஆஸ்திரேலியா உள்ளது
Recommended Video

நோ பால் சர்ச்சை
இதனிடையே, இங்கிலாந்து பந்துவீச்சின் போது அந்த அணி வீரர் பென் ஸ்டோக்ஸ் 14 முறை நோ பால் வீசியுள்ளார். இந்த 14 பந்துக்கும் நடுவர் நோ பால் அறிவிக்காமல் விட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நோ பாலை மூன்றாம் நடுவர் தான் அறிவிக்க வேண்டும். ஆனால் அவர் அறிவிக்காமல் விட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் பென் ஸ்டோக்ஸ் தொடர்ந்து 4 நோ பாலை வீசியுள்ளார். அதில் 4வது பந்தில் வார்னர் அவுட்டானார். ஆனால் அதனை மட்டும் நடுவர் நோ பால் என அறிவித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











