புனே : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 318 ரன்களை இங்கிலாந்துக்கு இலக்காக அளித்துள்ளது.
இந்தியாவிற்கு எதிராக பௌலிங் செய்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3 போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்போது புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.
இந்திய வீரர்கள் ஷிகர் தவான், விராட் கோலி, க்ருணால் பாண்டியா, கேஎல் ராகுல் ஆகியோர் அபாரமாக விளையாடி இங்கிலாந்துக்கு 318 ரன்களை இலக்காக அளித்துள்ளனர். இந்தியா 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.