கொல்கத்தா டெஸ்ட் முடிந்த கையோடு, திருமண இன்னிங்சை ஆரம்பித்த புவனேஸ்வர்குமார்
மீரட்: கிரிக்கெட் வீரர் புவனேஸ்வர்குமாருக்கும், நீண்ட கால தோழி, நிருபுர் நகருக்கும் திருமணம் நடைபெற்றது.
இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடிய புவனேஸ்வர்குமாருக்கு திருமணத்திற்கு ரெடியாக போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை. உ.பி. மாநிலம் மீரட்டில் நேற்று, புவனேஸ்வர்குமார் திருமணம் நடைபெற்றது.

பல கிரிக்கெட் பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றனர். டெல்லியில் வரும் 30ம் தேதி இந்திய கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த புவனேஸ்வர்குமார் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
இந்திய அணியில் இருந்து ஓய்வு பெற்ற முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான், பாலிவுட் நடிகை சகாரிகா காட்ஜேவுடன் நேற்றுதான் திருமண பந்தத்தில் காலடி எடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Friday, November 24, 2017, 9:20 [IST]
Other articles published on Nov 24, 2017


Click it and Unblock the Notifications