
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம்
இதன்பிறகு இங்கிலாந்து அணியும் பாதுகாப்பு குறைபாடு எனக்கூறி தொடரை ரத்து செய்துவிட்டது. இதனால் இனி பெரிய அணிகள் யாரும் பாகிஸ்தானுக்கு செல்ல மாட்டார்கள் என எண்ணியபோது தான் வெஸ்ட் இண்டீஸ் அணி சென்றுள்ளது. அங்கு இரு அணிகளுக்கு இடையேயும் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறவுள்ளது.

பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்த தொடர் நாளை (13ஆம் தேதி) தொடங்குகிறது. இந்த தொடருக்கு எந்தவித இடையூறும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்துப்படுகிறது. எனினும் தீவிரவாத அச்சுறுத்தல் அதிகம் உள்ளதாக தகவல் வெளியானதால் அந்நாட்டு அரசு கடும் பாதுகாப்பு ஏற்பாட்டை செய்துள்ளது. அதாவது, 889 கமோண்டோ படை வீரர்கள், 3822 போலீசார் மற்றும் 500 RRF படை வீரர்கள், 46 டி.எஸ்.பி.கள்,315 என்.ஜி.ஓ.க்கள் மற்றும் 50 பெண் போலீசார் என 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல்
இதனால் எப்படியாவது இந்த தொடர் நடைபெற்று விடும் என அனைவரும் நிம்மதி பெரு மூச்சு விட்ட நிலையில், தற்போது புது பூகம்பம் கிளம்பியுள்ளது. ஹோட்டல் அறையில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதாவது ஷெல்டன் காட்ரெல், ரோஸ்டன் சேஸ் மற்றும் கெயில் மேயர்ஸ் ஆகியோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து அணி ஊழியர் ஒருவருக்கும் கொரோனா பரவியுள்ளது.

ரசிகர்களின் கவனம்
இந்த 4 பேரையும் தனிமைப்படுத்தியுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, திட்டமிட்டபடி போட்டிகள் நடைபெறும் என அறிவித்துள்ளது. மீதமுள்ள அனைத்து வீரர்களையும் பாதுகாப்பான முறையில் தங்கவைக்கப்பட்டு டி20 தொடரையாவது முடித்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடன் உள்ளது. இப்படி பல்வேறு சிக்கல் கொண்ட இந்த தொடர் தற்போது உலக கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











