
சர்ச்சை
டெல்லி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் செஃபாலி வர்மா. சேவாக் போல் அதிரடியாக விளையாடி டெல்லி அணிக்கு நல்ல தொடக்கத்தை அளிக்க கூடியவர். இந்த நிலையில்,இவர் ஆட்டமிழந்த விதத்தில் தான் சர்ச்சை எழுந்தது.

நோ பால்
இஸி வாங் வீசிய ஓவரில் ஒரு பந்து ஃபுல் டாசாக மாறியது. அதனை செஃபாலி அடிக்க முயன்ற போது அது கேட்ச் ஆனது. இதற்கு கள நடுவர் நோ பால் வழங்காமல் அவுட் கொடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த செஃபாலி வர்மா, டிஆர்எஸ் மூலம், அதற்கு நோ பால் கேட்டார்.

நடுவர்கள் முடிவு
இதனையடுத்து ரீப்ளேவில் அது உயரமாக சென்றது தெரியவந்தது. ஆனால் மூன்றாம் நடுவர், அது நோ பால் இல்ல என்று அறிவித்தார். இது டெல்லி அணிக்கு பெரும் பின்னடைவை தந்தது. டெல்லி அணி நிர்ணயித்த ஸ்கோரை , மும்பை அணி 3 பந்துகள் எஞ்சிய நிலையில் தான் வெற்றி பெற்றது.

ரசிகர்கள் புகார்
இதனால் செஃபாலி வர்மா கூடுதலாக ரன்கள் அடித்து இருந்தால் மும்பை அணி தோல்வி அடைய கூட வாய்ப்பு இருந்திருக்கும். இதனால் நடுவர்கள் மும்பைக்கு சாதகமாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நடுவர்களின் உதவியால் மும்பை அணி முக்கிய போட்டிகளில் வெற்றி பறும் என்பது ரசிகர்கள் காலம் காலமாக வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு தீனி போடும் வகையில் நேற்றைய சம்பவம் நடந்துள்ளது.


Click it and Unblock the Notifications











