அடப்பாவிகளா.. கிரிக்கெட்ல சண்டைனா இப்படியா.. செங்கல் வீச்சு, துப்பாக்கிச் சூடு, கலவரம்!
நொய்டா : கிரேட்டர் நொய்டா அருகே இருக்கும் காலோண்டா கிராமத்தில் கிரிக்கெட் விளையாட சென்றவர்கள் பெரிய கலவரத்தை உண்டாக்கி இருக்கிறார்கள். அதில் துப்பாக்கி பயன்படுத்தப்பட்டிருப்பது பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது.
கடந்த புதன்கிழமை விடியற்காலை காலோண்டா கிராமத்தில் சில சிறுவர்கள் கிரிக்கெட் விளையாட சென்று இருக்கிறார்கள். அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த ஒருவர் நாட்டுத் துப்பாக்கி மூலம் மற்றொருவரை சுட்டுள்ளார். அதையடுத்து இரண்டு பிரிவினராக பிரிந்து செங்கல், கட்டைகள் கொண்டு தாக்கியுள்ளனர்.

அது மட்டுமில்லாமல் இரண்டு பிரிவினரும் துப்பாக்கி வைத்து மாற்றி மாற்றி சுட்டுக் கொண்டார்கள் என கூறப்படுகிறது. காலை ஏழு மணிக்கு காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் சென்றதை அடுத்து பெரிய படையுடன் காவலர்கள் வந்து இரண்டு பிரிவினரையும் தடுத்து இருக்கிறார்கள். இதுவரை ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளார்கள்.
சிலர் தலைமறைவாகி விட்டார்கள். அவர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர். ஐந்து பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் உள்ளனர். அதில் ஒருவர் நிலை படுமோசமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த கலவரத்தை அடுத்து கிராமம் முழுவதும் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளது.
கிரிக்கெட் விளையாட துப்பாக்கி எல்லாம் எதுக்குப்பா எடுத்துட்டு போறீங்க...


Click it and Unblock the Notifications