
குஜராத் அணிக்கு சிக்கல்
எனவே சாம்பியனான குஜராத் அணிக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் தான் இந்தாண்டும் முதல் லீக் போட்டி நடைபெறவுள்ளது. தோனியின் கடைசி வருடமாக பார்க்கப்படுவதால் வெற்றியுடன் தொடங்க சிஎஸ்கேவும், விட்ட இடத்தில் இருந்து வெற்றியுடன் தொடங்க குஜராத் அணியும் தீவிர முனைப்பு காட்டும். இந்நிலையில் தான் குஜராத் அணிக்கு சிக்கல் உண்டாகியுள்ளது.

என்ன பிரச்சினை
குஜராத் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளரான ஜோஸ் லிட்டில் தொடரில் இருந்து விலகலாம் எனத் தெரிகிறது. அயர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரரான இவரை கடந்த ஏலத்தின் போது ரூ.4.4 கோடி கொடுத்து குஜராத் அணி வாங்கியது. கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமாகி குறுகிய காலத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். குறிப்பாக 2019ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 4 - 45 என அட்டகாசமாக செயல்பட்டார்.

ரெக்கார்ட்
இதுவரை 53 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஜோஸ் லிட்டில் 62 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். அவரின் எகானமி வெறும் 7.66 ரன்கள் தான். சராசரியாக 23 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை எடுத்து விடுகிறார். இந்திய களத்தில் லிட்டிலின் பந்துவீச்சு பொறுத்தமாக இருக்கும் என்பதால் அவரை குறிவைத்தார் ஆஷிஸ் நெஹ்ரா.

என்ன காயம்
தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் சுற்றில் விளையாடி வந்தார். அப்போது தசைப்பிடிப்பு ஏற்படுவதாக அடிக்கடி கூறியதால் உடனடியாக தாய் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். சிகிச்சை பெற்று குணமடைய நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்பதால் பிஎஸ்எல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இதே நிலைமை தான் அடுத்த மாதம் தொடங்கும் ஐபிஎல்-க்கும் வரும். அல்லது முதல் பாதி போட்டிகளை தவறவிடலாம்.


Click it and Unblock the Notifications











