For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஸ்டம்ப்களை பறக்க விட்ட முகமது சிராஜ்.. கேப்டனாக வெற்றியுடன் திரும்பிய விராட் கோலி..பஞ்சாப் ஏமாற்றம்

மொஹாலி : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் நீண்ட காலத்திற்கு பிறகு கேப்டனாக திரும்பியுள்ள விராட் கோலி, முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

டுபிளஸிஸ் ஈடுப்பில் ஏற்பட்ட காயத்தால் வெறும் பேட்ஸ்மேனாக மட்டும் களமிறங்கினார். டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் சாம் கரண், முதலில் பந்துவீசினார். இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய டுபிளசிஸ், விராட் கோலி ஜோடி முதலில் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டனர்.

Brilliant spell from Mohammed siraj made RCB beat Punjab by 24 runs

31 பந்துகளில் டுபிளஸிஸ் அரைசதம் கடந்தார். இதில் 3 சிக்சரும், 4 பவுண்டரியும் அடங்கும். ஆனால் கோலியின் ஸ்ட்ரைக் ரேட் சரியத் தொடங்கியது. இதனால் 40 பந்துகளில் தான் அவர் அரைசதம் கடந்தார். விராட் கோலி இறுதியில் 47 பந்தில் 59 ரன்கள் சேர்த்து பெவிலியன் திரும்பினார். முதல விக்கெட்டுக்கு இந்த ஜோடி 137 ரன்கள் குவித்தது.

அடுத்த பந்திலேயே மேக்ஸ்வெல் ஆட்டமிழக்க, டுபிளஸிஸ் 56 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகளும், 5 சிக்சர்களும் அடங்கும். தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 7 ரன்களில் வெளியேற, பெங்களூரு அணி அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்துள்ளது,

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, முதல் ஓவரிலேயே விக்கெட் இழந்தது. அதர்வா 4 ரன்களிலும், அதிரடி வீரர் ஷார்ட் 8 ரன்களிலும் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லிவிங்ஸ்டோன் 2 ரன்களில் பெவிலியன் திரும்பினார். ஹர்பிரித் சிங் 13 ரன்கள் எடுத்திருந்த போது ரன் அவுட் ஆனார்.

இதே போன்று பஞ்சாப் அணியின் கேப்டன் சாம் கரணும் ரன் அவுட் ஆக, பஞ்சாப் அணிக்கு அது பெரிய இடியாக அமைந்தது. இதனால் 76 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. தொடக்க வீரர் பிராப்சிம்ரன் சிங் மட்டும் தனி ஆளாக நின்று போராடி 30 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். கடந்த ஆட்டத்தில் அணிக்கு வெற்றி தேடி தந்த ஷாரூக்கான் 7 ரன்கள் மட்டுமே சேர்த்தார்.

Brilliant spell from Mohammed siraj made RCB beat Punjab by 24 runs

கடைசி 3 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆட்டத்தின் 18வது ஓவர் வீசிய முகமது சிராஜ், 4 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி 2 ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜித்தேஷ் சர்மா மட்டும் போராடினார். எனினும் அவரும் 27 பந்துகளில் 41 ரன்கள் மட்டுமே எடுத்து ஹர்சல் பட்டேல் ஓவரில் கேட்ச் ஆக, பஞ்சாப் அணி 150 ரன்களில் சுருண்டு 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. சிராஜ் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Story first published: Thursday, April 20, 2023, 19:14 [IST]
Other articles published on Apr 20, 2023
English summary
Brilliant spell from Mohammed siraj made RCB beat Punjab by 24 runs
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+