
மும்பை : இடதுகை பெருவிரல் காயத்தில் இருந்து முழுவதுமாக, குணமடையாத ஜஸ்ப்ரிட் பும்ரா, இங்கிலாந்தில் நடக்க இருக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே, புவனேஸ்வர் குமார் காயத்தோடு ஒருநாள் போட்டியில் விளையாடியது சர்ச்சையான நிலையில், தற்போது அதே போல காயத்தோடு இருக்கும் பும்ராவும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஒரு நாள் தொடரை இழந்தது. அடுத்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. ஏற்கனவே, புவனேஸ்வர் குமார் காயத்தோடு ஒரு நாள் போட்டியில் ஆடினார். காயம் குணமாகாத நிலையில் டெஸ்ட் அணியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா ஆகியோருடன், பும்ராவும் டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க இங்கிலாந்து சென்றுள்ளனர்.
