
யுவி- கோஹ்லி ஜோடி அசத்தல்
களத்தில் இருந்த கோஹ்லியுடன் யுவராஜ் கை கோர்த்தார். 29 பந்துகளில் யுவராஜ்சிங் அரைசதத்தைக் கடந்து விளையாடினார். அவர் 32 பந்துகளில் 53 ரன்கள் எடுத்த நிலையில் யுவி அவுட் ஆனார். அப்போது 46.2 ஓவர்களில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 285 ரன்களை எடுத்திருந்தது.

கோஹ்லி- பாண்ட்யா
கோஹ்லி 58 பந்துகளில் அரைசதத்தைக் கடந்தார். யுவி பெவிலியனுகுத் திரும்பிய நிலையில் ஹர்திக் பாண்ட்யா களத்துக்கு வந்தார். கடைசி ஓவரில் முதல் 3 பந்துகளை அடுத்தடுத்து சிக்சர்களுக்கு பறக்க விட்டு மிரட்டினார் பாண்ட்யா. 48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 319 ரன்கள் குவித்தது.

பாகிஸ்தானும் மழையும்
பின்னர் பாகிஸ்தான் களத்துக்கு வந்தது. அந்த அணி 4.5 ஓவர்களில் 22 ரன்கள் எடுத்த நிலையில் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. மழை தொடர்ந்ததால் டிஎல்எஸ் முறைப்படி 41 ஓவர்களாக குறைக்கப்பட்டது. 41 ஓவர்களில் 289 ரன்கள் எடுத்தால் பாகிஸ்தான் வெற்றி என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

மந்தமான ஆட்டம்
தொடக்கம் முதலே பாகிஸ்தான் அணி வீரர்கள் மந்தமாக விளையாடி வந்தனர். 9 ஓவர்கள் முடிவடைந்த நிலையில் 12 ரன்களே எடுத்த நிலையில் பாகிஸ்தானின் அகமது ஷேசாத் அவுட் ஆனார். அப்போது பாகிஸ்தான் 47 ரன்களைத்தான் எடுத்திருந்தது.

தொடர்ச்சியாக மோசமான ஆட்டம்
தொடர்ந்தும் பாகிஸ்தான் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. 5வது விக்கெட்டு விழுந்ததுதான் தாமதம்... அதற்கடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் சீரான இடைவெளியில் பறிகொடுத்தது பாகிஸ்தான். 164 ரன்களே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது பாகிஸ்தான். இதையடுத்து டக்-ஒர்த் லெவிஸ் முறைப்படி இந்திய அணி 124 ரன்களில் வென்றதாக அறிவிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications











