
தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்
இப்படிப்பட்ட சூழலில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன், பாகிஸ்தான் மோதுகிறது. தென் ஆப்பிரிக்கா ஆல்ரவுண்டர்களையும், அதிரடி வீரர்களையும் கொண்ட ஒரு நாடு. உலக ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இலங்கையை தனது முதல் ஆட்டத்தில் ஊதித் தள்ளியது தென் ஆப்பிரிக்கா. மனதளவில் சோகமாக உள்ள பாகிஸ்தான் இதில் வென்றேயாக வேண்டும். இந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றால் போட்டித்தொடரை விட்டு நடையை கட்ட வேண்டியிருக்கும்.

பாகிஸ்தான் வீக்
பாகிஸ்தானை பொறுத்தளவில் அதன் பேட்டிங்கும், ஃபீல்டிங்கும் தென் ஆப்பிரிக்காவோடு ஒப்பிட்டால் மலைக்கும், மடுவுக்கும் நடுவேயான வித்தியாசம்தான். ஃபீல்டிங்கில் பாகிஸ்தான் பழைய இன்சமாம் காலத்து அணியாகத்தான் இருக்கிறது. ஒருவேளை அவர்தான் பயிற்சியாளர் என்பதாலோ என்னவோ. இத்தனை ஆண்டுகளில் இந்தியாவின் ஃபீல்டிங் தரம் உயர்ந்ததில் 5ல் ஒரு பங்கு கூட பாகிஸ்தானின் ஃபீல்டிங் தரம் உயரவில்லை.

பேட்டிங் புலிகள்
பேட்டிங்கிலும் அம்லா, டிவில்லியர்ஸ், டிகாக், டுப்ளசிஸ், டுமினி, என மிரட்டலான அணி வகுப்பை நடத்துகிறது தென் ஆப்பிரிக்கா. பாகிஸ்தான் பேட்ஸ்மேன்களோ பதற்றத்தில் ஆடி கோட்டைவிட்டு வருகிறார்கள். இன்றை மழை பெய்து பாகிஸ்தானை காப்பாற்றினால் தவிர தென் ஆப்பிரிக்காவை அந்த அணி வெல்வது என்பது பெரும் கஷ்டம்.

பந்து வீச்சு டாப்
அஸ்வின் இல்லாத, இந்தியாவின் சாமானிய பவுலிங் அட்டாக்கிற்கே பல்லிளித்த பாகிஸ்தான், ரபடா, இம்ரான் தாகிர் போன்ற ஐசிசி பவுலர் பட்டியலில் டாப்பிலுள்ளவர்களுக்கு எதிராக எப்படி ஆடப்போகிறார்கள் என்ற அச்சம் பாகிஸ்தான் ரசிகர்களுக்கே உள்ளது. இந்தியாவுடன் தோற்றதற்காக டிவி பெட்டிகளை உடைத்த ரசிகர்கள் இன்றும் தோற்றால் அணி திரும்பும்போது ஏர்போர்ட் செய்து எதிர்ப்பு கோஷமிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.


Click it and Unblock the Notifications











