2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்க உள்ளது. இந்த ஒரு மாத கால கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த தொடரில் இந்தியா வலுவான போட்டியாளராக இருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலி நம்புகிறார். இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா போட்டியின் போது சிறப்பாக விளையாடுவார் என்றும் அவர் எதிர்பார்க்கிறார். இது குறித்து பேசிய கங்குலி, "50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் நாம் சிறப்பாக செயல்பட்டோம்.

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா போட்டியாளர்களில் ஒருவராக இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில், குறிப்பாக வெளியே விளையாடும்போது, அவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். வெள்ளை பந்து கிரிக்கெட்டில், ரோகித் அபாரமானவர். சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் போது, வேறுபட்ட ரோகித் சர்மாவைக் காண்பீர்கள்," என்று கங்குலி கூறினார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது முதல் போட்டியை வங்காளதேசத்திற்கு எதிராக தொடங்கும். எட்டு நாடுகள் பங்கேற்கும் இந்த நிகழ்விற்கான அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது, அதில் 15 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். 2013 ஆம் ஆண்டில் எம்.எஸ். தோனி தலைமையில் இந்த அணி வெற்றி பெற்றது மற்றும் 2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
கங்குலி, அதே நிகழ்வில் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விராட் கோலியின் எதிர்காலம் பற்றியும் கருத்து தெரிவித்தார். கோலியின் சமீபத்திய ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் அவர் ஆச்சரியப்பட்டதாகவும், ஆனால் வரும் சாம்பியன்ஸ் டிராபியில் அவரது செயல்பாடு குறித்து நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் கூறினார்.இந்திய கிரிக்கெட் சமீபத்தில் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, இந்த போட்டியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளன. தேர்ந்தெடுக்கப்பட்ட அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளனர். இந்தியா இந்த முறை வெற்றி பெறும் என்ற கங்குலியின் நம்பிக்கையை கிரிக்கெட் சமூகத்தின் பலரும் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த போட்டியின் போது கோலி தனது உச்சக்கட்ட பார்மில் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடரில் கோலி கடந்த காலங்களில் ரன் குவிப்பில் ஈடுபட்டாலும், இந்த தொடரில் அவர் ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை. இதனால் கோலி இந்த ரெக்கார்ட்க்கு முற்று புள்ளி வைப்பார் என்று சிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.