
சொதப்பல் பந்து வீச்சு
முதலில் பேட் செய்து 300 ரன்களுக்கு அதிகமாக இருந்த போதும் இலங்கை அணி எளிதாக இலக்கை அடைந்தது. இதற்கு காரணம் இந்திய அணியின் சொதப்பல் பந்து வீச்சுதான்.

அஸ்வின் இல்லையே
உலகின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் இல்லாமல் இந்த போட்டியை இந்தியா எதிர்கொண்டதுதான் தோல்விக்கு காரணம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

கோஹ்லிக்கு மனதில்லை
அஸ்வினை களமிறக்க கோஹ்லிக்கு மனதில்லை என்றும் தகவல் வந்தது. இந்த நிலையில், வென்றேயாக வேண்டிய போட்டியில் இன்று, அஸ்வினை களமிறக்கினர். அவரது வருகை அணியில் எந்த மாதிரி மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதற்கு இன்றைய ரிசல்ட்டே சாட்சி.

இன்று அசத்தல்
அஸ்வின் 9 ஓவர்கள் வீசி 43 ரன்களை விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். அதுவும் நல்ல ஃபார்மில் இருந்த ஆம்லாவை 35 ரன்களில் வெளியேற்றினார் அஸ்வின். அந்த கேட்சை சிஎஸ்கே சக தோஸ்து டோணி பிடித்தார்.

ஸ்பின்னர்கள் சிறப்பு
ஜடேஜா 10 ஓவர்கள் வீசி 39 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஸ்பின்னர்களிடம் தென் ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் திணறுவார்கள் என்பது மீண்டும் ஒருமுறை நிருபணமானது.

அரையிறுதி
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அஸ்வின் களமிறக்கப்பட்டிருந்தால் ஒருவேளை ஏற்கனவே இந்தியா வெற்றி பெற்று அரையிறுதி சென்றிருக்க நல்ல வாய்ப்பு இருந்தது.


Click it and Unblock the Notifications











