
இழப்பதற்கு எதுவும் இல்லை
இந்தப் போட்டி குறித்து அஸார் மஹமூத் கூறுகையில், எங்களிடம் இழப்பதற்கு எதுவும் இல்லை. உண்மையில் நெருக்கடி இந்தியாவுக்குத்தான்.

வரலாறு படைப்போம்
நாங்கள் நிச்சயம் வெல்வதற்காக மட்டுமே இங்கு வந்துள்ளோம். வரலாறு மாறும். மாற்றுவோம் என்று நம்புகிறேன். இது ஆஷஸ் (ஆஸ்திரேலியா -இங்கிலாந்து) மோதலை விட மிகப் பெரியது.

மிகப் பெரிய போட்டி
நிச்சயம் இந்தியா, பாகிஸ்தான் போட்டி மிகப் பெரியது. எந்த போட்டியையும் விட மிகப் பெரியது. இரு நாட்டு ரசிகர்களின் கிரிக்கெட் மீதான மோகத்தின் உச்சத்தை இதில் பார்க்கலாம் என்றார் அஸார்.

2007க்குப் பிறகு
இரு நாடுகளும் ஐசிசி இறுதிப் போட்டியில் மோதுவது 2007ம் ஆண்டுக்குப் பிறகு இதுவே முதல் முறை என்பதால் ரசிகர்கள் பெரும் கொண்டாட்ட மன நிலையில் உள்ளனர்.

கோஹ்லி கலக்குவார்
2007ல் எப்படி டோணி பாகிஸ்தானை வீழ்த்தி டுவென்டி 20 உலகக்கோப்பையை கொண்டு வந்தாரோ அதேபோல கோஹ்லியும் இப்போது சாம்பியன்ஸ் டிராபியுடன் ஊர் திரும்புவார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











