
டாப் கிளாஸ் பவுலர்
அஸ்வின் டாப் கிளாஸ் பவுலர். அனைவருக்கும் இது தெரியும். தொழில்முறை பந்து வீச்சாளரும் கூட. அணியின் தேவை, கட்டமைப்பு அவருக்குத் தெரியும். இதனால்தான் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அவர் இடம் பெறவில்லை.

நான இருக்கேன்
என்னிடம் அவர், எப்போது தேவையோ அப்போது நான் நிச்சயம் களம் இறங்குவேன் என்று அஸ்வின் உறுதியளித்துள்ளார். தான் கடைசிப் போட்டியில் இடம் பெறாமல் போனது குறித்து அவருக்கு வருத்தம் இல்லை. எனக்கும் அவருக்கும் இடையே மோதலும் இல்லை. அதுதான் நாங்கள.

டெக்னிக்கல் மோதல் உண்டு
டெக்னிக்கல் விஷயங்களில் எனக்கும், அவருக்கும் மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. பவுலிங்கைத் திட்டமிடுவதில் இருவரும் வாதிட்டுக் கொள்வோம். அவரிடம் அட்டகாசமான திட்டங்கள் இருக்கும். அதுதான் கடைசியில் நடைபெறும். ஆனால் தேர்வு சமாச்சாரங்களில் இருந்ததே இல்லை.

கஷ்ட காலம்
கேப்டனாக சில முடிவுகளை எடுப்பது என்பது கடினமாக இருக்கும். குறிப்பாக டோணிக்குப் பதில் பாண்ட்யாவை முன்கூட்டியே பேட் செய்ய பணித்தது. இருப்பினும் அணியின் நலன் கருதியே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படுகிறது என்றார் கோஹ்லி.


Click it and Unblock the Notifications











