
2002 போட்டி
2002ம் ஆண்டு நடந்த நாட்வெஸ்ட் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவும் இங்கிலாந்தும் மோதின. மயிர்க்கூச்செறியும் வகையில் நடந்த இப்போட்டியில இந்தியா அபாரமாக வெற்றி பெற்றது. அப்போது பெவிலியன் பால்கனியில் இருந்த கங்குலி ஆவேசமாக சட்டையைக் கழற்றி ஆட்டியபடி கூக்குரலிட்டார்.

மைதானத்தில் தலைகாட்டிய பிளின்டாப்
அப்போது மைதானத்தில் ஆண்ட்ரூ பிளின்டாப் நடமாடியது டிவியில் காட்டப்பட்டது. அதைப் பார்த்த ஆதர்டன், கங்குலி, பிளின்டாப் இருக்கிறார். ஏற்கனவே அவர் ஒருமுறை சட்டையைக் கழற்றினார். பதிலுக்கு நீங்களும் கழற்றினீர்கள். இந்த முறையும் அதுபோல நடந்து விட வேண்டாம். கிரிக்கெட்டின் தாயகத்தில் நடந்த அவமானங்கள் அவை என்று கூறி கிண்டலடித்தார்.

அப்படியா பாஸ்
அதைக் கேட்ட கங்குலி சிரித்தபடி அப்படியா நினைக்கிறீர்கள் என்று கேட்டு புன்னகைத்தார். உண்மையில் 2002ல் மும்பையில் வாங்கடே மைதானத்தில் நடந்த போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அப்போது பிளின்டாப் சட்டையைக் கழற்றி கொண்டாடினார். அதற்குத்தான் லார்ட்ஸ் மைதானத்தில் பதிலடி கொடுத்தார் கங்குலி என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னிச்சூ!
ஆனால் 2006ம் ஆண்டு தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார் பிளின்டாப். அது நிச்சயம் கெளரவக் குறைவானது. 10 விநாடி முட்டாள்தனம் என்று கூறியிருந்தார் பிளின்டாப் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கங்குலி மன்னிப்பெல்லாம் கேட்கவில்லை.


Click it and Unblock the Notifications











