லண்டன்: ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்க்க வந்த விஜய் மல்லையாவை பார்த்து திருடன், திருடன் என கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய வங்கிகளில் கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் இங்கிலாந்துக்கு தப்பி சென்றவர் விஜய் மல்லையா. கடனை திருப்பி செலுத்தாமல் இங்கிலாந்தில் சொகுசு வாழ்க்கை நடத்திவரும் மல்லையா, பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை ஹாயாக உட்கார்ந்து கண்டு கழித்தார்.
அதோடு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சுற்றித்திரிகிறார். மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு செல்ல அரசு முயற்சி எடுத்து வரும் நிலையில், அவர் ஜாலியாக சுற்றி வருகின்றார்.
இந்நிலையில் இன்று ஓவல் மைதானத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையே நடந்த கிரிக்கெட் போட்டியை காண மல்லையா நேரில் வந்தார். அவரைப் பார்த்ததும், மைதானத்தில் கூடியிருந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள், திருடன்... திருடன் என கத்தி கோஷம் எழுப்பியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.