For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி ஆட்டம்: வங்கதேசத்திற்கு எதிராக 240 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி

By Karthikeyan

ஓவல்: வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணி, 240 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் தொடங்குகிறது. இதையொட்டி நடைபெற்ற யிற்சி ஆட்டத்தில் இந்தியா, வங்காள தேசத்தை இன்று எதிர்கொண்டது.

Champions Trophy Warm-up Match: India thrash Bangladesh by 240 runs

டாஸ் வென்ற வங்காள தேசம் முதலில் பீல்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 324 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக தவான் (60), தினேஷ் கார்த்திக் (94), ஹர்திக் பாண்டியா (80) மற்றும் ஜடேஜா (32) ரன்கள் சேர்த்தனர். விராட் கோஹ்லி மற்றும் டோணி ஆகியோர் பேட்டிங் செய்யவில்லை.

கடின இலக்கை துரத்திய வங்கதேச அணி, துவக்கம் முதலே இந்திய அணி பந்துவீச்சை சமாளிக்க தடுமாறியது. அந்த அணியின் முஷ்பிகுர் (13), ஷாகிப் அல் ஹசன் (7), மெஹ்முதுல்லா (0), மொசாடெக் ஹொசைன் (0), மெஹெதி ஹசன் மிராஸ் (24), சன்சாமுல் இஸ்லாம் (18), ருபெல் ஹொசனை் (0) ரன்னிலும் அடுத்தடுத்து வெளியேறினர்.

இதனால் 23.5 ஓவரிலேயே 84 ரன்னில் ஆல்அவுட் ஆகி படுதோல்வி அடைந்தது. எனவே இந்தியா 240 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ் ஆகியோர் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.

Story first published: Tuesday, May 30, 2017, 22:57 [IST]
Other articles published on May 30, 2017
English summary
India thrashed Bangladesh by 240 runs in their second warm-up match of the Champions Trophy 2017 at the Oval, London.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+