சிட்னி: இலங்கையின் குமார் சங்கக்கரா மீதுதான் அத்தனை பேரின் கண்களும் விழுந்து எழுந்து கொண்டுள்ளன. இந்தியாவின் பேட்டிங் ஸ்டார் சச்சின் டெண்டுல்கரை அவர் ஓவர் டேக் செய்வாரா என்ற எதிர்பார்ப்பால்தான் இந்த ஆர்வம்.
நாளை நடைபெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டியில் இலங்கையும், தென் ஆப்பிரிக்காவும் மோதவுள்ளன. சிட்னியில் இப்போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக இரு அணிகளும் தயாராகி வருகின்றன.

அபாரமான பார்மில் தற்போது சங்கக்கரா உள்ளார். கடைசி போட்டிகளில் அவர் அடித்த அடி யாராலும் மறக்க முடியாதது. குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அவரது ஆட்டம் பிரமிக்க வைத்தது. இதுவரை நான்கு சதங்களை அவர் உலகக் கோப்பைப் போட்டியில் போட்டுள்ளார். நங்கூரம் போல இலங்கை அணியைக் காத்து வருகிறார். இந்த நிலையில் தற்போது புதிய சாதனை படைக்கும் ஒரு வாய்ப்பு சங்கக்கராவுக்கு வந்துள்ளது.