செயின்ட் லூசியா:இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் தவறான நோக்கத்துடன் கிரிக்கெட் விளையாடி வருகிறார் என ஆஸ்திரேலியா முன்னாள் கிரிக்கெட் வீரர் இயான் சேப்பல் கூறியுள்ளார்.உலக கோப்பை போட்டியில் இந்திய அணி வங்கதேசத்திடமும், இலங்கையுடனும் தோல்வியிற்று லீக் சுற்றிலேயே வெளியோறியது. இதையடுத்து இந்திய வீரர்களுக்கு அடுத்த பல எதிர்ப்புகள் வந்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் ஆட்டத்தின் மீது பல புகார்கள் வந்து கொண்டு இருக்கிறது.உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன் சச்சின் வங்கதேசத்திடமும், இலங்கையிடமும், சொற்ப ரன்னில் வெளியோறியது கிரிக்கெட் ரசிகர்களிடம் பெறும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனால் சச்சின் ஆட்டம் முடிந்து விட்டது இனி அவர் ஓய்வு பெற வேண்டிய காலம் வந்து விட்டது என பலரும் கருத்து தெரிவித்தனர்.இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தனியார் தொலைக்காட்சி வர்ணனையாளரருமான இயான் சேப்பல் சச்சின் ஆட்டம் குறித்து உலககோப்பை போட்டியின் 2வது அரையிறுதி போட்டியில் அவர் கூறியதாவது,தலைசிறந்த வீரர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள். ரசிகர்கள் ஏன் ஓய்வு பெறுகிறீர்கள் இன்னும் கொஞ்சகாலம் விளையாடுங்கள் என்று கேட்கும் நிலையில் ஓய்வு பெறவேண்டும். எப்போது ஓய்வு பெறப் போகிறீர்கள் என்று கேட்கும் வரை அணியில் ஒட்டிக் கொண்டிருக்கக் கூடாது.ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் வார்ன், வேகப்பந்து வீச்சாளர் மெக்ராத், மேற்கிந்திய தீவுகள் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் லாரா ஆகியோர் ஓய்வு பெற்றுள்ளதை சச்சின் கவனத்தில் கொள்ள வேண்டும்.சிறந்த வீரர்கள் ரன் எடுக்கவோ அல்லது விக்கெட் வீழ்த்தவோ சிரமப்பட்டுக் கொண்டு அணியில் நீடிக்கக் கூடாது. அது அணிக்கு நல்லது அல்ல. சச்சின் எதோ தவறான நோக்கத்துடன் கிரிக்கெட்டில் நீடித்து வருகிறார் என அவர் கூறினார்.சச்சின் குறித்து இயான் சேப்பல் கூறியுள்ள இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.