
எத்தனை
இந்த போட்டியில் இங்கிலாந்து அணிக்கு இந்திய அணியின் இளம் வீரர் பண்ட் ஆடிய விதம் சென்னை ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளது. பண்ட் இன்று இந்திய அணிக்காக தனி நபராக போராடினார். இதனால் ஒவ்வொரு முறை இவர் ஸ்டிரைக் எடுக்கும் போதும் சென்னை ரசிகர்கள் உற்சாகம் கொடுத்தனர்.

ரன்கள்
இந்திய அணியின் மற்ற வீரர்களை கொண்டாடியவதை விட பண்ட் சென்னை ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்டார். இவர் பேட்டிங் வரும் போதெல்லாம் ரிஷப் பண்ட் என்று அவரின் பெயரை சொல்லி கோஷம் எழுப்பினார்கள். இது பண்டிற்கு பெரிய அளவில் உற்சாகத்தை கொடுத்தது.

பண்ட்
கோலி, ரோஹித் சர்மா போன்ற வீரர்களுக்கு கூட இப்படி ஒரு உற்சாகத்தை சென்னை ரசிகர்கள் கொடுக்கவில்லை. 2017-2018 கால கட்டத்தில் பண்ட் கொஞ்சம் திணறினார். அப்போதெல்லாம் கூட சென்னை ரசிகர்கள் இவருக்கு மிகுந்த உற்சாகம் கொடுத்தனர்.

கொண்டாட்டம்
இப்போதும் அவரை கொண்டாடி வருகிறார்கள். பண்ட் இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. தோனிக்கு இணையாக பண்டை சென்னை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

உணர்ச்சிவசப்பட்டார்
இதனால் அவரே இன்றும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டார். இதனால்தான் அவுட்டாகி வெளியே செல்லும் போது பண்ட் கொஞ்சம் வருத்தத்துடன், உணர்ச்சிவசப்பட்டபடி சென்றார். சென்னை மக்களுக்கு ஒரு சதத்தை கொடுக்க முடியவில்லையே என்றது


Click it and Unblock the Notifications