ஜெட்டா: 2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எத்தனை வீரர்களை வாங்கியது என்பது பற்றி இங்கே பார்க்கலாம். அஸ்வின், விஜய் ஷங்கர், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா போன்ற வீரர்களை சிஎஸ்கே அணி வாங்கி உள்ளது.

2025 ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணி வாங்கிய வீரர்கள் பட்டியல் -
டெவோன் கான்வே - 6.75 கோடி
ராகுல் திரிபாதி - 3.40 கோடி
ரச்சின் ரவீந்திரா - 4 கோடி (ஆர்டிஎம்)
ரவிச்சந்திரன் அஸ்வின் - 9.75 கோடி
கலீல் அகமது - 4.80 கோடி
நூர் அகமது - 10 கோடி
விஜய் சங்கர் - 1.20 கோடி
சாம் கர்ரன் - 2.40 கோடி
ஷேக் ரஷீத் - 30 லட்சம்
அன்ஷுல் கம்போஜ் - 3.40 கோடி
முகேஷ் சவுத்ரி - 30 லட்சம்
தீபக் ஹூடா - 1.70 கோடி
குர்ஜப்னீத் சிங் - 2.20 கோடி
நாதன் எல்லிஸ் - 2 கோடி
ஜேமி ஓவர்டன் - 1.50 கோடி
கமலேஷ் நாகர்கோடி - 30 லட்சம்
ராமகிருஷ்ண கோஷ் - 30 லட்சம்
2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன் சிஎஸ்கே அணியால் தக்க வைக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் -
ருதுராஜ் கெய்க்வாட் - 18 கோடி
ரவீந்திர ஜடேஜா - 18 கோடி
சிவம் துபே - 12 கோடி
மதீஷா பதிரானா - 13 கோடி
எம் எஸ் தோனி - 4 கோடி
2025 ஐபிஎல் மெகா ஏலம் நவம்பர் 24 மட்டும் 25 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற்றது. இதில் முதல் நாள் (நவம்பர் 24) அன்று சிஎஸ்கே அணி ஏழு வீரர்களை வாங்கியது. இரண்டாவது நாள் பத்து வீரர்களை வாங்கியது. அதில் ஆப்கானிஸ்தான் வீரர் நூர் அகமதை 10 கோடி ரூபாய்க்கும், ரவிச்சந்திரன் அஸ்வினை 9.75 கோடி ரூபாய்க்கும் வாங்கியது.
இவர்கள் இருவர் தான் 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிக தொகை கொடுத்து வாங்கிய வீரர்கள். இவர்களை தவிர டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ஆகிய இரண்டு முன்னாள் சிஎஸ்கே வீரர்களையும் அந்த அணி வாங்கியது.
அதிரடி பேட்ஸ்மேன் ராகுல் திரிபாதியை சிஎஸ்கே அணி 3.40 கோடி ரூபாய்க்கு வாங்கியது. வேகப் பந்துவீச்சாளர் கலீல் அகமதை 4.80 கோடி ரூபாய்க்கு வாங்கியது. தமிழக வீரர் விஜய் சங்கரை 1.20 கோடிக்கு வாங்கியது. இளம் பந்துவீச்சாளர் அன்ஷுல் கம்போஜ்-ஐ 3.40 கோடிக்கு வாங்கி உள்ளது.