|
கல்லி கிரிக்கெட்
தெருவோரங்களில் விளையாடப்படும் கல்லி கிரிக்கெட் குறித்து வீரர்கள் பாடும் வீடியோ சிஎஸ்கே அணி வெளியிட்டுள்ளது. தற்போது, இந்த பாடல் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மொத்தம் ஒன்றரை நிமிடங்களே ஓடும் இந்த பாடல் சூப்பராக கிரியேட் செய்யப்பட்டிருக்கிறது.
கலக்கல் சிஎஸ்கே
தமிழை உச்சரிக்க அவர்கள் சிரமப்படுவது, பாடலின் போது சென்னை ரசிகர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு நடமாடுவது என ஏக சேஷ்டைகளுடன் அந்த பாடல் வெளி வந்திருக்கிறது. தடுமாறி தமிழை உச்சரித்தபடி பிராவோ, ரெய்னா, தாஹிர் என ஒட்டு மொத்த டீமும் இந்த பாடலில் கலக்கி இருக்கிறது.
சென்னைவாசிகள்
இந்த பாடலை பார்க்கும் போது, கூடிய சீக்கிரத்தில் சிஎஸ்கேவில் இருக்கும் வீரர்கள் அனைவரும் சென்னைக்கே குடி வந்தாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவுக்கு சென்னை வாசிகளாகவே மாறி இருக்கின்றனர். தோனி என்று கூப்பிடாமல் தல என்று அழைக்கின்றனர். ஹர்பஜனோ தமிழ் புலவராகவே மாறி போயிருக்கிறார்.
ஏக சுவாரசியம்
சிலம்பம் சுத்துவது, தோசை சுடுவது, சென்னையில் பில்டர் காபியை போடுவது, தெருவில் சிறுவர்களுடன் கிரிக்கெட் ஆடுவது என அனைவருக்கும் சென்னை பிடித்து போய்விட்டது. தற்போது சென்னை ராப் பாடலை பயிற்சி செய்து பாடிய வீடியோ டாப். டொக்கு வச்சா மொக்கப் ப்ளேயரு, டக்கு பௌலருக்கு பேபி ஓவரு என்று தொடங்கும் இந்த ராப் பாடலை வீரர்கள் வாயில் நுழையாமல் பாடும் சிரமத்தைப் பார்க்க ஏக சுவாரஸ்யம்.