
திறமை குறையாத கெயில்
ஐபிஎல்லில் ஆர்சிபி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் உள்ளிட்ட அணிகளுக்காக விளையாடியுள்ள கிறிஸ் கெயில் பல்வேறு சாதனைகளையும் தொடர்ந்து புரிந்து வருகிறார். வயதானாலும் ஸ்டைலும் திறமையும் கொஞ்சமும் குறையவில்லை என்ற வாக்கியத்திற்கு சொந்தக்காரராகவும் விளங்குகிறார் கெயில்.

125 ஐபிஎல் போட்டிகள்
இவர் கடந்த 2012ல் ஐபிஎல் சீசனில் 733 ரன்களை 160 ஸ்டிரைக் ரேட்டுடன் ஆர்சிபி அணிக்காக விளையாடி தந்துள்ளார். இதுவரை 125 போட்டிகளில் விளையாடியுள்ள கெயில், சராசரியாக 41.13ஐ பெற்றுள்ளார். கடந்த 2013 சீசனில் விளையாடி அவுட் ஆகாமல் 175 ரன்களை எடுத்தது மிகப்பெரிய ஸ்கோராக உள்ளது.

329 சிக்ஸ்கள்
ஐபிஎல்லின் ஒரே இன்னிங்சில் 17 சிக்ஸ்களை அடித்தும் கெயில் சாதனை புரிந்துள்ளார். இந்நிலையில் அதிகபட்சமாக 329 சிக்ஸ்களை அடித்த வீரராக முதலிடத்தில் உள்ளார் கெயில். இவருக்கு அடுத்தபடியாக உள்ள டீ வில்லியர்ஸ் 225 சிக்ஸ்களை மட்டுமே அடித்துள்ளார்.

8வது வீரராக சாதனை
கடந்த 2018ல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இவரை 2 கோடி ரூபாய் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்நிலையில், தற்போது ஐபிஎல்லில் 4500 ரன்களை கடந்துள்ள 8வது வீரர் என்ற பெருமை கிறிஸ் கெயிலுக்கு நேற்றைய ஆட்டத்தின்மூலம் கிடைத்துள்ளது. இந்த சீசனில் இவர் ஆடிய முதல் போட்டி நேற்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டி.

3வது வெளிநாட்டு வீரர்
முன்னதாக ஐபிஎல்லில் 4500 ரன்களை விராட் கோலி, சுரேஷ் ரெய்னா, ரோகித் சர்மா, டேவிட் வார்னர், ஷிகர் தவான், டீ வில்லியர்ஸ், எம்எஸ் தோனி ஆகியோர் கடந்துள்ள நிலையில், தற்போது 8வது வீரராக கிறிஸ் கெயில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை செய்துள்ள 3வது வெளிநாட்டு வீரர் கெயில் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











