பெண் குழந்தை
இந்த சர்ச்சைகளை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் கெயில் ஆடி வருகிறார். தொடரின் நடுவே, அவரின் மனைவிக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பார்த்துவிட்டு பெங்களூர் அணிக்கு திரும்பிய கெயில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
பிரிட்டீஷ் பத்திரிகை
இம்முறை கெயில் சர்ச்சையில் சிக்கியுள்ளது பெண் பத்திரிகையாளர் ஒருவரிடம். அவர் இங்கிலாந்தை சேர்ந்த தி டைம்ஸ் பத்திரிகையின் பெண் நிருபர் கர்லோடே எட்வர்ட்ஸ் என்பவராகும்.
பெண் சுதந்திரம்
கெயிலிடம் பேட்டியெடுக்க அந்த பெண் நிருபர் சென்றபோதுதான், இந்த சம்பவம் நடந்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி, பெண்களின் சுதந்திரம் குறித்து கெயிலிடம் நிருபர் கருத்து கேட்டபோது மீண்டும் சுயரூபத்தை வெளிக்காட்டினார் கெயில்.
மன்மதனாக்கும்
கெயில் கூறியதாக அந்த நிருபர் எழுதியுள்ள விவரம் இதுதான்: பெண்கள்கள் ஆண்களுக்கான சம உரிமையையும் தாண்டி வளர்ந்துவிட்டனர். எனது அழகை கண்டு மயங்கி என்மீது சாய்கிறார்கள்.
பெரிய பேட்
நான் நல்ல ஆட்டக்காரன் என்கிறார்கள். காரணம், என்னிடம் உள்ள பேட் உலகத்திலேயே, மிகவும் பெரியது, கனமானது. இதை உங்களால் ஒரு கையால் தூக்க முடியாது. இரு கைகளையும் பயன்படுத்தினால்தான் தூக்க முடியும் (அத்தனையிலும் இரட்டை அர்த்தம்).
த்ரீசம்
நீங்கள் (பெண் நிருபர்) எத்தனை கருப்பினத்து ஆண்களை அனுபவித்திருப்பீர்கள்? எப்போதாவது த்ரீசம் செய்துள்ளீர்களா? நான் பந்தையம் வேண்டுமானாலும் கட்ட தயார், நீங்கள் த்ரீசம் செய்திருப்பீர்கள், இல்லையா.. இவ்வாறு கெயில் நாராசமாக பேசினாராம்.
சர்ச்சை
நேற்று எடுத்த அந்த பேட்டி பற்றி பெண் பத்திரிகையாளர், இவ்வாறு கூறியுள்ளார். இது கெயில் மீது புது சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆஸ்திரேலிய சம்பவத்திற்கு பிறகு, கெயில் பேட்டிங்கில் சோபிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.