சாதனை படைத்த கிறிஸ் கெயில்
நேற்று நடந்த பங்களாதேஷ் பிரிமியர் லீக் இறுதிப் போட்டியில் 'ரங்பூர் ரைடர்ஸ்' அணியும் 'டாக்கா டைட்டன்ஸ்' அணியும் மோதியது. மிகவும் திரில்லாக சென்ற இந்த போட்டியில் ரங்பூர் அணிக்காக விளையாடிய கிறிஸ் கெயில் 18 சிக்ஸர்கள் அடித்தார். 69 பந்துகள் பிடித்த இவர் 146 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் கடைசி ஓவரில் மட்டும் இவர் 3 சிக்ஸர்கள் அடித்தார்.

ரன்கள்
இந்த போட்டியின் மூலம் கெயில் 11,000 ரன்களை கடந்தார். டி-20 போட்டிகளில் 11,000 ஆயிரம் ரன்கள் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. அதேபோல் இந்த போட்டியில் இவர் அடித்த 18 சிக்ஸர்கள்தான் டி-20 போட்டியில் அடிக்கப்பட்ட அதிக சிக்ஸ்கள். பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கெயில் அடித்த 17 சிக்ஸ்கள்தான் இதுவரை சாதனையாக இருந்தது. தற்போது அதை அவரே முறியடித்துள்ளார்.
20 வது சதம்
இந்த போட்டியின் மூலம் இவர் 20வது சதம் அடித்து இருக்கிறார். இதுவரை டி-20 போட்டிகளில் இருபது சதம் அடித்த ஒரே வீரர் இவர் மட்டுமே. பல வீரர்கள் ஒருநாள் போட்டியிலேயே சதம் அடிக்க திணறிக்கொண்டு இருக்கும் போது கெயில் டி-20 போட்டியிலேயே அசால்ட்டாக இரட்டை சதம் அடிப்பதாக இவர் பாராட்டி இருக்கிறார் .
அடுத்து என்ன சாதனை
இவர் இதுவரை 4 முறை 11 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 3 முறை 12 சிக்ஸர்கள் அடித்துள்ளார். அதன்பின் வரிசையாக 13, 14, 15, 17 என எல்லா வகையிலும் சிக்ஸர்கள் அடித்து இருக்கிறார். இதுவரை இந்த சாதனையை எந்த வீரரும் செய்ததே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











