For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மாணவர்களுடன் ஆட்டம் போட்ட கெயில்.. சென்னை அணியில் விளையாட விருப்பம்

By Karthikeyan

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி மீண்டும் இணைந்தால் சென்னை ‌அணிக்கு விளையாட விரும்புவதாக மேற்கு இந்திய தீவுகள் அணி நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் தெரிவித்துள்ளார்.

சென்னை தனியார் பள்ளியில் சர்வதேச செஸ் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நட்சத்திர வீரர் கிறிஸ் கெயில் பள்ளி வளாகத்துக்கு தேரில் அழைத்து வரப்பட்டார்.

chris gayle preference to play in chennai super kings

மாணவர்களுக்கு பரிசளித்த பின்னர் பேசிய கெயில், ரசிகர்களின் ஆதரவு இருப்பதால் தம்மால் உற்சாகத்துடன் ஐபிஎல் போட்டியில் பங்கேற்‌க முடிகிறது என்றார்.

chris gayle preference to play in chennai super kings

பின்னர் மாணவர்களின் கேள்விக்கு பதிலளித்த கெயில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டும் ஐ.பி.எல். போட்டியில் இடம் பெற வேண்டும் எனவும், அந்த அணியில் விளையாட தான் விரும்புவதாகவும் தெரிவித்தார். மேடையில் பள்ளி மாணவர்‌ளுடன் கிறிஸ் கெயில் நடனமாடி மகிழ்வித்தார்.

Story first published: Wednesday, September 7, 2016, 3:12 [IST]
Other articles published on Sep 7, 2016
English summary
west indies player chris gayle preference to play in chennai super kings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X