For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பஞ்சாப் அணிக்காக களமிறங்கும் கெயில்... கைதூக்கி விடுவாரா... காத்திருக்கும் ரசிகர்கள்

ஷார்ஜா : ஆர்சிபி மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையிலான ஐபிஎல்லின் 31வது போட்டி இன்று இரவு ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இதில் முதல் முறையாக கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் வீரர் கிறிஸ் கெயில் பங்கேற்கவுள்ளார்.

Chris Gayle will be in action tonight against RCB

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் 2020 புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ள நிலையில், இனி ஆடும் போட்டிகளில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஐபிஎல் 2020 சீசனில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக களமிறங்கவுள்ளார் கிறிஸ் கெயில். அவர் தொடர்ந்து உடல்நிலை பாதித்த நிலையில் இதுவரை அந்த அணி ஆடிய போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இன்றைய ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்க உள்ளார்.

காயங்களால் அவதி... இருந்தாலும் முதலிடத்தை பிடிச்சே தீருவோம்... சபதத்தில் டெல்லி அணி காயங்களால் அவதி... இருந்தாலும் முதலிடத்தை பிடிச்சே தீருவோம்... சபதத்தில் டெல்லி அணி

கடந்த இரு தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து இன்ஸ்டாவில் பதிவிட்ட கிறிஸ் கெயில் போராடாமல் தான் எப்போதுமே ஓய்ந்ததில்லை என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் புள்ளிகள் பட்டியலில் இறுதியில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை அவர் கைதூக்கி விடுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்னும் விளையாடவுள்ள 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி அடுத்த கட்டத்திற்கு நகர வாய்ப்புள்ளது.

Story first published: Thursday, October 15, 2020, 13:38 [IST]
Other articles published on Oct 15, 2020
English summary
Chris Gayle will be in action tonight for the first time in IPL2020
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X