மழை வந்து சன்ரைசர்ஸ் கனவில் மண்ணை அள்ளிப் போட்டது
டெல்லி: சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பை இழந்து தொடரை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்.
ஒரு பந்து கூட வீசப்படாத நிலையில் நேற்று நடைபெறுவதாக இருந்த ஹைதராபாத், பிரிஸ்பேன் ஹீட் அணிகளுக்கு இடையிலான போட்டி கைவிடப்பட்டது.
அகமதாபாத்தில் நேற்று இப்போட்டி நடைபெறுவதாக இருந்தது.

பரிதாபகரமாக வெளியேற்றம்
மழையால் ஆட்டம் கைவிடப்பட்டதால் ஹைதாரபாத் அணி பெரும் அதிர்ச்சி அடைந்தது.

சாம்பியன்ஸ் தொடரிலிரு்ந்து நீக்கம்
காரணம் அது சாம்பியன்ஸ் டிராபி போட்டித் தொடரின் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற முடியாமல் போனதால்.

பிரிஸ்பேன் ஏற்கனவே அவுட்
அதேசமயம், பிரிஸ்பேன் ஹீட் அணி ஏற்கனவே தோற்றிருப்பதால் நேற்றைய போட்டி அதற்கு முக்கியானதில்லை.

போட்டி நடந்து ஜெயித்திருந்தால்...
நேற்றைய போ்ட்டி நடந்து ஹைதராபாத் வென்றிருந்தால் அதற்கு அரை இறுதிக்கான வாய்ப்பு கிடைத்திதருக்கும்.
Story first published: Tuesday, October 1, 2013, 9:03 [IST]
Other articles published on Oct 1, 2013


Click it and Unblock the Notifications