கொண்டாட்டம்
போட்டி நடைபெற்ற மைதானத்துக்கு வெளியே, ரசிகர்கள் திரண்டு கொண்டாடி மகிழ, அதற்கு சில மணி நேரங்கள் முன்பாக.... அதாவது போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி செய்த செயல் இந்தியாவுக்கு அவப்பெயரை ஏற்படுத்தி இருக்கிறது.
வைரல் போட்டோ
அதாவது... போட்டிக்கு முன்பாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, 2 பெண்களோடு எடுத்துக்கொண்ட போட்டோ சமூக வலை தளத்தில் வைரலானது. இந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள், இது தான் இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை பயிற்சியா? என்று கொந்தளித்து விட்டனர். ஐபிஎல்லில் இருந்து மீண்டு வரவில்லை என்றும் கருத்தும் காட்டமாக கூறி இருக்கின்றனர்.
|
பயிற்சி அற்புதம்
அதில் ஜாய் ஹின்டிங்ஸ் என்பவர், இந்திய அணியின் உலக கோப்பை பயிற்சி அற்புதமாக இருக்கிறது என்று பொங்கி இருக்கிறார். மற்றொருவரோ, இந்திய கிரிக்கெட் அணியின் உலகக்கோப்பை பயிற்சி சிறப்பாக போகிறது என்று நக்கலடித்துள்ளார்.
|
நல்லவேளை.. டீமில் இல்லை
மற்றொருவர்... அதனால் தான் அவர்கள் செய்தியாளர்களின் சந்திப்புகளை தவிர்க்கின்றனர் என்று குறிப்பிட்டு இருக்கிறார். அதிலும் மற்றொருவரோ... நல்ல வேளை.. ஆடும் 11 பேர் கொண்ட அணியில் அவர் இல்லை என்று கூறியிருக்கிறார்.
|
வித்தியாசம் என்ன?
இந்த போட்டோவில் இருக்கும் ரவி சாஸ்திரிக்கும், இந்திய அணிக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை என்று ஒருவர் கிழித்து தொங்கவிட்டுள்ளார். அடுத்து வரக்கூடிய செய்தியாளர்கள் சந்திப்பில், அவருக்காக கடுமையான கேள்விகள் காத்திருக்கின்றன என்று மற்றொருவர் கூறியிருக்கிறார்.
|
ஐபிஎல் நினைப்பு
நாங்க எல்லா பக்கமும் நல்லா விளையாடுவோம்... கிரெண்டுலயும் சரி, மற்ற இடத்திலேயும் சரி.. இது மற்றொருவரின் கருத்து. இன்னும் ஐபிஎல் நினைப்பில் தான் ரவி சாஸ்திரி இருக்கிறார் என்று மேலும் ஒரு ரசிகர் ஒரு காட்டு காட்டியிருக்கிறார். ஒட்டு மொத்தத்தில் இந்திய அணியின் பெயரையும், வெற்றி கொண்டாட்டத்தையும் ஒரேயொரு போட்டோவில் கப்பலேற்றி.. மானத்தை வாங்கி இருக்கிறார் ரவி சாஸ்திரி.