சிட்னி: விராட் கோஹ்லி உலக கிரிக்கெட்டின் ராஜாவாகிவிட்டதாக, ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட்டரும், வர்ணணையாளருமான டீன் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த டோணி, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து புதிய கேப்டனாக விராட் கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து டீன் ஜோன்ஸ் கூறியதாவது: விளையாட்டு உலகிலேயே கஷ்டமான விஷயம் என்றால், அது இந்திய கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக இருப்பதாகத்தான் இருக்கும்.

உலக கிரிக்கெட்டில், பலம் வாய்ந்த நாடு இந்தியா. பணக்கார கிரிக்கெட் வாரியமும் அதுதான். அந்த நாட்டின் அணி தலைவராக இருப்பது உலக அளவில் மிகவும் கவுரவம்மிக்க பதவியாகும். அந்த வகையில் உலக கிரிக்கெட்டின் புதிய மன்னன் விராட் கோஹ்லிதான்.
அவரது தலைமையில் இந்திய டெஸ்ட் அணி வெளிநாடுகளிலும் வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இவ்வாறு டீன் ஜோன்ஸ் தெரிவித்தார்.