
ரசிகர்கள் கேள்வி
கொரோனா பாதிப்பு தற்போது இந்தியாவில் பெருமளவு குறைந்துவிட்டது. வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20, இலங்கைக்கு எதிரான டி20 மற்றும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட் ஆகிய தொடர்களுக்கு மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்கும் பிசிசிஐ, விராட் கோலியின் 100வது டெஸ்ட்க்கு மட்டும் பார்வையாளர்களை அனுமதிக்காதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

பழிவாங்கும் பிசிசிஐ?
விராட் கோலிக்கும், கங்குலிக்கும் ஏற்கனவே கேப்டன்ஷி விவகாரத்தில் மோதல் நிலவியதால், பிசிசிஐ பழிவாங்குவதாக ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில், பிசிசிஐ ரசிகர்களை மொஹாலி டெஸ்ட்டில் அனுமதிக்க வேண்டும் என்று சமூக வலைத்தளத்தில் ஸ்பெஷல் ஹாஸ்டேக் மூலம் டிரெண்டிங் ஆனது.

பிசிசிஐ விளக்கம்
ரசிகர்களை அனுமதிக்கவில்லை என்றால் போட்டியை புறக்கணிக்க உள்ளோம் என்றும் ரசிகர்கள் எச்சரித்துள்ளனர். இந்த நிலையில் பதறி போன பிசிசிஐ, சந்திகார் என்பது சிறிய நகரம், அங்கு தினசரி 30, 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இது வீரர்களுக்கு பாதுகாப்பு குறைபாட்டை தரும் என்பதால் தான் பார்வையாளர்களுக்கு அனுமதி தரவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.
Recommended Video

மாற்ற முடியாது
மேலும் மொஹாலியில் சர்வதேச போட்டி நடைபெற்று நீண்ட நாட்களாகிவிட்டதால் சுழற்சி முறையில், அங்கு போட்டி நடத்த முன்னதே திட்டமிடப்பட்டதால் கடைசி நேரத்தில் மாற்ற முடியாத நிலையில் பிசிசிஐ உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 100வது டெஸ்ட்டையொட்டி கோலியை கேப்டன் பொறுப்பை ஏற்க பிசிசிஐ விடுத்த கோரிக்கையை அவர் நிராகரித்து விட்டதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











