
முதல் டெஸ்ட் போட்டி
இதனால் இந்திய அணி தற்போது 130 ரன்கள் முன்னிலை பெற்று தனது 2வது இன்னிங்ஸை தொடர்ந்து விளையாடி வருகிறது. அதில் 16 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து நிதானமாக விளையாடி வருகிறது. இன்று 4ம் நாள் ஆட்டத்தில் அதிக இலக்கை நிர்ணயிக்க முணைப்பு காட்டி வருகிறது.

கொரோனா பிரச்சினை
இந்நிலையில் தான் கொரோனா சர்ச்சை கிளம்பியுள்ளது. தென்னாப்பிரிக்க நாட்டில் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதால் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவே இந்திய அணி தயங்கியது. எனினும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் மீது நம்பிக்கை வைத்து கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் விளையாடி வருகிறது.

என்ன ஆனது
இந்நிலையில் தென்னாப்பிரிக்க வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது. அதுவும் வீரருக்கு கொரோனா உறுதியானதையும் மறைத்து தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் போட்டிகளை நடத்தி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி விளக்கம்
இதுகுறித்து விளக்கமளித்த தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியம், அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆலிவருக்கு கொரோனா பாதித்தது உண்மை தான். ஆனால் அது தற்போது ஏற்பட்டது கிடையாது. டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்னதாகவே அவர் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் பிறகு முறையான சிகிச்சை பெற்று தனிமைப்படுத்தப்பட்ட பிறகே அணியில் இணைக்கப்பட்டார் எனத்தெரிவித்துள்ளது.
Recommended Video

துரோகம்?
கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த போதும், தென்னாப்பிரிக்க அணி கொடுத்த வாக்குறுதியை நம்பி பிசிசிஐ சுற்றுப்பயணம் மேற்கொண்டது. ஆனால் இப்படி உண்மையை மறைத்து போட்டிகளை நடத்தியிருப்பது பிசிசிஐ-கே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications