
பாகிஸ்தான் போட்டி
தொடக்க வீரர் ஹுசைன் சாண்டோ சிறப்பாக விளையாடி 48 பந்துகளில் 54 ரன்களை குவித்திருந்தார். இவருக்கு துணையாக ஆடிய சௌம்யா சர்கார் 17 பந்துகளில் 20 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் வங்கதேச அணி 73 ரன்களுக்கு 2 விக்கெட்களை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்தது.

மீண்டும் அம்பயரின் சர்ச்சை
இந்த சூழலில் களத்திற்கு வந்த கேப்டன் சகிப் அல் ஹசனுக்கு முதல் பந்திலேயே அதிர்ச்சி இருந்தது. ஆட்டத்தின் 11வது ஓவரில் சதாப் கான் வீசிய டாஸ் பந்தை சகிப் தவறவிட்டதால் பேட்டில் பட்டது. அப்போது களநடுவர் உடனடியாக அவுட் கொடுத்தார். ஆனால் பேட்டில் எட்ஜானது என உறுதியாக இருந்த சகிப் அல் ஹசன் 3வது நடுவருக்கு பரிந்துரைத்தார்.

உண்மை என்ன
ரிவ்யூ செய்து பார்த்த போது, பந்து நேராக பேட்டில் உரசிச்சென்றது தெரியவந்தது. மேலும் அல்ட்ரா எட்ஜிலும் பேட்டில் எட்ஜானது தெளிவாக தெரிந்தது. ஆனால் அப்போதும் அது அவுட்தான் என 3வது நடுவர் அறிவித்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. தெளிவாக உண்மை தெரிந்தபோதும் எதற்காக அவுட் கொடுத்தார்கள் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

அம்பயர்கள் விளக்கம்
இதற்கு அம்பயர்கள் விளக்கமும் கொடுத்தனர். அதாவது பந்தானது பேட்டில் படவில்லை எனவும், அது பிட்ச்-ல் பட்டதால் அல்ட்ரா எட்ஜில் காட்டுகிறது என கூறினர். உண்மையில் பந்துக்கும், பிட்ச்-க்கும் பெரிய இடைவெளி இருந்தது. இதன் மூலம் மீண்டும் ஒருமுறை டி20 உலகக்கோப்பையில் மோசமான அம்பயரிங் செய்யப்பட்டுள்ளது.

குறைந்த ஸ்கோர்
அந்த ஒரு விக்கெட்டின் தாக்கத்தால் வங்கதேச அணியின் மொத்த நம்பிக்கையும் குறைந்தது. இதனால் அடுத்தடுத்து விக்கெட்கள் விழ 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 127 ரன்களை மட்டுமே சேர்த்தது. 13 ஓவர்களில் 90 ரன்களுக்கு மேல் இருந்த வங்கதேச அணி 150+ அடிக்கும் என எதிர்பார்த்த நிலையில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications