
கே.எல்.ராகுலின் நிலை
கே.எல்.ராகுலை அணியில் இருந்து நீக்கியே தீர வேண்டும் என குரல்கள் எழுந்தன. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் துணைக்கேப்டன் பதவியில் இருந்து பிசிசிஐ நீக்கிவிட்டது. இதனால் 3வது டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் 11ல் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு கிடைப்பதே சந்தேகமாகியுள்ளது. இதே போல துணைக்கேப்டன் யார் என்பதையும் இன்னும் அறிவிக்காமல் உள்ளனர்.

அடுத்த துணைக்கேப்டன் யார்?
தற்போது உள்ள அணியில் ரோகித் சர்மாவுக்கு பின்னர் கேப்டன்சிக்கு தகுதியானவர்கள் என்றால் ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா மற்றும் சட்டீஸ்வர் புஜாரா ஆகியோர் தான். குறிப்பாக அஸ்வினுக்கு கடினமான சூழல்களில் என்ன முடிவை எடுக்க வேண்டும் என்பது நன்கு தெரியும். மேலும் அவரின் ஃபார்ம் தற்போது மிகச்சிறப்பாக உள்ளதால் பல வேரியேஷன்களை முயற்சித்து பார்த்து வருகிறார்.

ஹர்பஜன் சிங் கருத்து
இந்நிலையில் இதுகுறித்து ஹர்பஜன் சிங் மறைமுகமாக தாக்கியுள்ளார். அதில், என்னைப்பொறுத்தவரை துணைக்கேப்டன் என்பவர் ப்ளேயிங் 11ல் எப்போதுமே இடம்பிடிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இந்தியா மற்றும் அயல்நாட்டு களங்கள் இரண்டிலுமே ஆட வேண்டும். அப்படி பார்த்தால் ரவீந்திர ஜடேஜா தான் கேப்டனாக வேண்டும். அவரிடம் நிறைய பொறுப்புகள் இருப்பதை நான் பார்த்துள்ளேன்.

ஸ்பெஷல் திறமை
அணிக்கு சிறப்பான சீனியர் வீரரான ஜடேஜா, சிறப்பான கேப்டனாகவும் செயல்பட முடியும். உலகில் அவரை போன்ற ஒரு நல்ல ஆல் ரவுண்டர் கிடையாது. உள்நாடு மற்றும் அயல்நாடு என இரண்டு களங்களிலும் ஜடேஜாவுக்கு ப்ளேயிங் 11ல் இடம் கிடைக்கும் என ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள், அஸ்வினும் ஜடேஜாவுக்கு நிகரான ஆல் ரவுண்டர் தான் என விமர்சித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











