
என்ன நடந்தது
4வது லீக் ஆட்டத்தில் பாரிஷல் அணிக்காக களமிறங்கிய ஷகிபுல் ஹசன், சில்ஹெட் ஸ்ட்ரைக்கர்ஸ் அணியுடன் பலப்பரிட்சை நடத்தினார். ஆட்டத்தின் 15.4 வது ஓவரில் ரிஜூர் வீசிய பந்து ஷகிபுல் ஹசன் தலைக்கு மேல் சென்றது. இதற்கு நியாயப்படி ஓயிடு வழங்கி இருக்க வேண்டும். ஆனால், நடுவர் இதனை ஒரு ஓவருக்கு ஒரு ஷாட் பால் என்ற கணக்கில் சேர்த்து விட்டார்.

கடும் ஆத்திரம்
அம்பயரின் இந்த முடிவால் கடும் ஆத்திரமடைந்த ஷகிப் அல் ஹசன், லெக் அம்பயரை பார்த்து ஏய், ஏய் என்று கத்தினார். பிறகு நடுவரிடம் அடிப்பது போல் நடந்து சென்று எதற்கு ஓயிடு பால் தரவில்லை என்று சண்டையிட்டார். அதற்கு நடுவரும், சக வீரரும் ஷகிப் அல் ஹசனிடம் காரணங்களை கூறி சமாளித்து அனுப்பி வைத்தனர். இது பேசுப்பொருளானது.

புதிய பிரச்சினை
இந்நிலையில் சகிப்-க்கு எதிராக புதித்தாக ஒரு பிரச்சினை கிளம்பியுள்ளது. அதாவது கடந்த 2019ம் ஆண்டு டாக்கா டாமினேட்டர்ஸ் மற்றும் குல்னா டைகர்ஸ் அணி மோதிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதில் மெஹிடி ஹாசன் வீசிய அவுட்சைட் ஆஃப் பந்தை பேட்ஸ்மேன் கட் ஷாட் அடித்தார். இதனால் பந்து பேட்டில் இன்ஸைட் எட்ஜாகி கீப்பரிடம் உருண்டு சென்றது.

சுயநலம்
ஆனால் பேட்டில் பட்ட இந்த பந்திற்கு அம்பயர் மோசமாக வைட் கொடுத்தார். அப்போது நான் ஸ்ட்ரைக்கர் எண்டில் சகிப் தான் இருந்தார். அப்போது அது நியாயம் இல்லை என்று தெரிந்தும் அவர் குரல் எழுப்பவில்லை. தனக்காக நியாயம் நியாயம் என கத்தும் சகிப் அல் ஹசன், மற்றவர்களுக்கு நடக்கும் போது மட்டும் எதுவும் பேசாமல் நழுவி விடுகிறார் என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











