மும்பை: அனில் கும்ப்ளே ராஜினாமா விவகாரம் இந்திய கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல்வேறு கிரிக்கெட் பிரபலங்களும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து அனில் கும்ப்ளே விலகியுள்ளது பெரும் ஷாக் செய்தியாக வந்துள்ளது. கோஹ்லிக்கும், கும்ப்ளேவுக்கும் ஒத்துப் போகாத காரணத்தால் கும்ப்ளே விலகி விட்டார்.
