
159 ரன்கள்...
56 ரன்கள் முன்னிலையில் 2வது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 159 ரன் எடுத்து இருந்தது. முரளி விஜய் 64 ரன்னும், புஜாரா 50 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

முரளி விஜய்- புஜாரா அபாரம்
இன்று 4வது நாள் ஆட்டம் நடந்தது. 2வது விக்கெட்டுக்கு முரளி விஜய் - புஜாரா ஜோடி 133 ரன் எடுத்தனர். முரளி விஜய் 76 ரன் எடுத்து இருந்த போது அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 185 ஆக இருந்தது.

ரோகித்- ஜடேஜா
பின்னர் கோஹ்லி- புஜாரா ஜோடியும் நிதானமாக விளையாடி ரன்களைக் குவித்தது. இந்த ஜோடியும் அவுட் ஆனது. ஜடேஜாவும் ரோகித் சர்மாவும் விளையாடி வந்தனர். ரோகித் சர்மா 68 ரன்கள்; ஜடேஜா 50 ரன்கள் எடுத்திருந்தனர்.

டிக்ளேர்
5 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. நியூசிலாந்து முதல் டெஸ்டில் வெல்ல 434 ரன்கள் தேவை என்ற இலக்குடன் அந்த அணி 2-வது இன்னிங்ஸை விளையாடி வருகிறது.

தடுமாற்றம்...
பின்னர் இன்றைய ஆட்ட நேர முடிவில், நியூசிலாந்து அணி 4 விக்கெட்டுகளுக்கு 93 ரன்கள் எடுத்துள்ளது. நியூசிலாந்து அணி தடுமாறி வருவதால் இந்தியா வெற்றி பாதையை நோக்கி பயணித்து வருகிறது.


Click it and Unblock the Notifications