சென்னை : ஜனவரி 1959 அன்றைய கல்கத்தாவின் ( இன்றைய கொல்கொத்தா ) ஈடன் கார்டன் மைதானம்.மேற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரோஹன் கன்ஹாய் (Rohan Kanhai) அவுட். கேட்ச் பிடித்தவர் பாலி உம்ரிகர் ( Poly Umrigar). பந்து வீசியவர் சுரேந்திரநாத்.(Surendra Nath) ஸ்டேடியத்தில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவர்கள் கன்ஹாயின் மிக சிறந்த பேட்டிங்கிற்காக.எழுந்து நின்று கை தட்டினர்,
மேற்கு இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 614 ரன்கள் குவித்து டிக்ளர் செய்தனர்.அந்த அணியில் பாசில் புட்சர்(Basil Butcher) மற்றும் காரி சோபர்ஸ்( Gary Sobers) சதங்கள் எடுத்தனர். அவர்கள் ரன்கள் முறையே 103 மற்றும் 106.
