கிரிக்கெட்: பாகிஸ்தான் தொடரை வென்றது
டெல்லி:
டெல்லியில் நடைபெற்ற இறுதி ஒரு நாள் போட்டியிலும் பாகிஸ்தான் வெற்றி பெற்று 4-2 என்ற கணக்கில் தொடரைக்கைப்பற்றியது.
இந் நிலையில் இறுதி ஒரு நாள் போட்டி டெல்லியில் இன்று நடைபெற்றது. முதலில் விளையாடிய பாகிஸ்தான் அணி 50ஓவர்களில் 303 ரன்கள் குவித்தது. 304 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் இந்தியா களமிறங்கியது.
ஆனால் யாருமே பொறுப்புடன் ஆடவில்லை. 37 ஓவர்களில் இந்தியா 144 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும்இழந்தது. இதனால் பாகிஸ்தான் 159 ரன்களில் அபாரமாக வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் போட்டித் தொடரை 4-2 என்ற கணக்கில் வென்றது. இன்றைய போட்டியின் சிறந்தஆட்டக்காரராக சோயப் மாலிக் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகனாக 15 விக்கெட்டுகளை கைப்பற்றிய நவீத் உல் ரானாதேர்ந்தெடுக்கப்பட்டார்.
[an error occurred while processing this directive]
Story first published: Wednesday, December 7, 2011, 17:52 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications