மாஜி மனைவியுடன் சேர்ந்து என்னை கொல்ல பார்க்கிறார்.. கிரிக்கெட் வீரர் மீது லியாண்டர் பயஸ் புகார்
வாரணாசி: பிரபல டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், கிரிக்கெட் வீரர் அதுல் சர்மா தன் முன்னாள் மனைவி மீது கொண்டுள்ள காதலால், தன்னையும், தன் மகளையும் கொல்ல முயற்சிப்பதாக வாரணாசி போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
உத்திரப் பிரதேச மாநிலம் வாரணாசியைச் சேர்ந்தவச்ர் கிரிக்கெட் வீரர் அதுல் சர்மா. இவர் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பாக விளையாடினார்.

இந்நிலையில், தனது முன்னாள் மனைவி ரியா பிள்ளையுடன் அதுல் சர்மாவிற்குத் தொடர்பிருப்பதாகவும், எனவே, தன்னையும் தன் மகளையும் மும்பை பந்த்ரா கோர்ட் வளாகத்தில் வைத்து அவர் மிரட்டியதாகவும் போலீசில் புகார் அளித்துள்ளார் பயஸ்.
இது தொடர்பாக போலீசில் அவர் சில ஆதாரங்களையும் அவர் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. பயசின் புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.
Story first published: Friday, October 17, 2014, 18:04 [IST]
Other articles published on Oct 17, 2014


Click it and Unblock the Notifications