
டெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா, ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்ட பிறகு வந்த பில்லை பார்த்து ஷாக் ஆகிவிட்டார். 6,99,930 ரூபாய்க்கு பில் வந்தால் யார் தான் ஷாக் ஆக மாட்டார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஆகாஷ் சோப்ரா தற்போது டிவி வர்ணனையாளராக உள்ளார். அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு செய்தியை போட்டுள்ளார்.

அதில் ஒரு ஹோட்டலில் லஞ்ச் சாப்பிட்டதற்காக கொடுக்கப்பட்ட பில்லை இணைந்திருந்தார். ஒரு லஞ்சுக்காக 7 லட்சம் செலவிட்டுள்ளேன் என்று அவர் அதில் கூறியுள்ளார்.
ரொம்ப ஷாக் ஆகி அது எந்த ஓட்டல், இப்படி எல்லாமா மோசடி செய்வார்கள் என்று ஆவேசப்பட வேண்டாம். ஆகாஷ் சேப்ரா சாப்பிட்டது இந்தோனேசியாவின் பாலியில் உள்ள ஒரு மிகப் பெரிய ஹோட்டல்.
இந்த பில் இந்தோனேசிய ருபையாவில் உள்ளது. தற்போதைய கணக்கின்படி 210 இந்தோனேசிய ரூபாய், நமது ஒரு ரூபாய்க்கு சமமாகும். அதன்படி, ஆகாஷ் சோப்ரா சாப்பிட்டது, ரூ.3,334க்குதான்.
இதுவே கொஞ்சம் ஓவர்தான் என்று நீங்கள் நினைக்கலாம்.