
ராக்கெட் வேகம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீபக் சாஹர் பெயர் வந்ததும் அனைத்து அணிகளும் கடுமையாக மோதினர். குறிப்பாக ராஜஸ்தான் அணி தீபக் சாஹரை விட்டு கொடுப்பதாக இல்லை. ஆரம்பத்தில் அமைதியாக இருந்த சிஎஸ்கே, பின்னர் களத்தில் குதித்தது. இதனால் தீபக் சாஹரின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

14 கோடி
இதன் மூலம் தீபக் சாஹரை 14 கோடி ரூபாய் கொடுத்து சென்னை அணி வாங்கியது. இதனையடுத்து சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தீபக் சாஹரை 2018ஆம் ஆண்டு சென்னை அணி 80 லட்சம் ருபாய் கொடுத்து வாங்கிய நிலையில், தற்போது 14 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது.

பலம்
தீபக் சாஹர் புதிய பந்தில் நன்றாக ஸ்விங் செய்ய கூடியவர். இதே போன்று பேட்டிங்கிலும் தற்போது அசத்தி வருகிறார். கடந்த ஒரு ஆண்டாக இந்திய அணிக்கு பல்வேறு போட்டிகளை தீபக் வென்று தருகிறார். இதனால் தான் அவரை சிஎஸ்கே விடவில்லை. இதனால் சிஎஸ்கே அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

சிஎஸ்கே எடுத்த வீரர்கள்
தற்போது வரை சென்னை அணி பிராவோ, உத்தப்பா, தீபக் சாஹர் , அம்பத்தி ராயுடு ஆகியோரை வாங்கியுள்ளது. இதன் மூலம் சென்னை அணி, ஏற்கனவே தங்களுக்காக விளையாடிய வீரர்களையே குறிவைத்து எடுப்பது தெளிவாக தெரிகிறது. இது சென்னைக்கு கை கொடுக்குமா என்று பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











