நான் இருக்கும் வரை தோனி அணிக்காக அதை செஞ்சுட்டே இருப்பேன்… உருக வைத்த அந்த வீரர்
சென்னை:நான் இருக்கும் வரைக்கும் சென்னை அணிக்கு அதை தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன் என்று சிஎஸ்கே பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 18வது போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணியும், பஞ்சாப் அணியும் மோதின. போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் தோனி.
அதன்பிறகு சென்னை அணி முதலில் பேட்டிங்கை தொடர்ந்தது. துவக்க வீரரான டு பிளெசிஸ் சிறப்பாக ஆடி 54 ரன்கள் எடுத்தார். கடைசி கட்டத்தில் தோனி மற்றும் ராயுடு அதிரடியாக ஆட 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 160 ரன்களை சென்னை குவித்தது.

138 ரன்களை எடுத்தது
பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்களை மட்டுமே எடுத்தது. அதனால் சென்னை அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் சூப்பர் வெற்றி பெற்றது.

சிறந்த பந்துவீச்சு
சென்னை அணி சார்பாக ஹர்பஜன் சிங் சிறப்பாக பந்துவீசி 4 ஓவர்களில் 17 ரன்களை மட்டும் விட்டுகொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். சென்னை அணியின் வெற்றிக்கு அவர் மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

2 வது ஓவர் வீச வாய்ப்பு
அதனால் தோனி என் திறமையை நம்பி 2 வது ஓவரே வீச வாய்ப்பு கொடுத்தார். அதே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினேன்.

மிக்க மகிழ்ச்சி
இந்த போட்டியில் அணியின் வெற்றி எனக்கு மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், சென்னை அணிக்காக நான் எப்போதும் சிறப்பாக விளையாட கடமைப்பட்டுள்ளேன். மைதானம் எனது பந்துவீச்சுக்கு நன்றாக கைகொடுத்தது என்று கூறினார்.


Click it and Unblock the Notifications