
கொரோனா பாதித்த சிஎஸ்கே வீரர்கள்
ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்காக கடந்த 20ம் தேதியையொட்டி 8 அணிகளும் யூஏஇக்கு தங்களது பயணங்களை துவங்கினர். சிஎஸ்கே அணியினரும் கடந்த 21ம் தேதி துபாய்க்கு பயணம் மேற்கொண்டனர். இந்நிலையில் குவாரன்டைனில் ஈடுபட்டிருந்த சிஎஸ்கே வீரர்களுக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அந்த அணியின் 2 வீரர்கள் மற்றும் 11 ஊழியர்களுக்கு பாசிட்டிவ் கண்டறியப்பட்டது.

பாதிக்கப்பட்ட பயிற்சி
இதையடுத்து அவர்கள் தொடர்ந்து 14 நாட்கள் குவாரன்டைனில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் மற்ற வீரர்களின் பயிற்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மற்ற அணி வீரர்களுக்கு தொடர்ந்து இருமுறை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் அவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

களமிறங்கும் சிங்கங்கள்
இதுகுறித்து இரு தினங்களுக்கு முன்பு பேசிய அந்த அணியின் சிஇஓ விஸ்வநாதன் கொரோனா பரிசோதனைக்கு பிறகு இன்றிலிருந்து சிஎஸ்கே வீரர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். நேற்று எடுக்கப்பட்ட அடுத்த டெஸ்ட்டிலும் சிஎஸ்கே வீரர்களுக்கு கொரோனா நெகட்டிவ் வந்துள்ளதையடுத்து தற்போது அணியின் பயிற்சி முகாம் உறுதிப்பட்டுள்ளது.

மைதானங்களில் பயிற்சி
கடந்த 21ம் தேதி துபாய் சென்ற சிஎஸ்கே வீரர்கள் 10 நாட்களுக்கு மேலாகியும் தங்களது குவாரன்டைனை மட்டும் முடித்துக் கொண்டு ஹோட்டல் அறைகளில் முடங்கியுள்ளனர். ஏற்கனவே 5 மாதங்கள் கொரோனா காரணமாக முடங்கியிருந்த அவர்கள், துபாய் புறப்படுவதற்கு முன்னதாக சென்னை சிதம்பரம் மைதானத்தில் 6 நாட்களுக்கு பயிற்சி மேற்கொண்டனர். தற்போது மீண்டும் துபாயில் பயிற்சி மேற்கொள்ளவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











