புகார் தந்த தோனி
இந்நிலையில் சென்னை நட்சத்திர ஹோட்டலில் தங்கியுள்ள சிஎஸ்கே கேப்டன் தோனி காவல் ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். தோனி தனது அணி மேலாளர் ரசூல் மூலம் இந்தப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செல்பி போட்டோ
தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறு தரும் அளவில் காவல் அதிகாரிகள் தங்கள் வீட்டுப் பிள்ளைகளை அழைத்து வந்து செல்பி எடுக்கவும் போட்டோ எடுக்கவும் நிற்கின்றனர். இது மிகுந்த இடைஞ்சலை உருவாக்கியுள்ளது என்று தோனி அதில் கூறியிருக்கிறார்.
தனிப்பட்ட சுதந்திரம்
தனது தனிப்பட்ட சுதந்திரத்தைத் தடுக்கும் வகையில் இது எப்படி அனுமதிக்கப் படுகிறது என்றும் தோனி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அந்த புகார் காவல் ஆணையருக்கு அனுப்பப்பட்டு, பின்னர் தெற்கு மண்டல இணை ஆணையர் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
டென்ஷனில் தோனி
சாதாரணமாக அனைவருடனும் பழகக்கூடிய தோனியை மைதானங்களில் ரசிகர்கள் ஓடி பிடித்து விளையாடிய சம்பவங்களும் உண்டு. ஆக.. அவரையே டென்ஷனாக்கி இருக்கிறது இந்த சம்பவம்.